தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 6 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

        திருவண்ணாமலையில் வரும் 27-ம் தேதி  கார்த்திகை தீபத் திருவிழா நடக்க உள்ளதால் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. வரும் 27-ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து காலை பத்து பத்துக்கு புறப்பட்டு மாலை மூன்று 30 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.
மறுமார்க்கமாக திருவண்ணாமலையிருந்து இரவு எட்டு 30க்கு புறப்பட்டு, சென்னைக்கு நள்ளிரவு இரண்டு 15க்கு வந்தடையும். மேலும் புதுச்சேரி, விழுப்புரத்திலிருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் ஹவுரா விரைவு ரயில் சிறப்பு நிறுத்தமாக அன்று மட்டும் திருவண்ணாமலையில் நின்று செல்லும்.
இதுதவிர, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் திருவண்ணாமலைக்கு 2 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

புதியவட்டமாக கலசபாக்கம்

       திருவண்ணாமலை மாவட்டம், போளுர் வட்டத்திலுள்ள 9 குறுவட்டங்களில் 3 முன்று குறுவட்டங்களான கலசபாக்கம், கடலாடி, கேட்டவரம்பாளையம் ஆகிய உள்வட்டங்களை உள்ளடக்கி புதியதாக கலசப்பாக்கம் என்ற வட்டத்தினை உருவாக்க மாண்புமிகு முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
      இந்த புதிய வட்டத்தில் பணியாற்றுவதற்க்காக வெவ்வேறு நிலைகளில் மறுபணி பரவலமர்த்தல் மூலம் 23 பணியிடங்களும் மற்றும் புதியதாக 19 பணியிடங்களும் உருவாக்கப்படும். இதற்க்காக தொடரும் செலவினமாக 1 கோடியே, 35 லட்சத்து, 46 ஆயிரத்து 176 ரூபாயும், வட்டாச்சியர் அலுவலகம், குடியிருப்பு, வட்டாச்சியர் அலுவலகத்திற்கு தேவையான தளவாடங்கள், ஜீப், கணினி, பிரிண்டர், ஜெராக்ஸ் இயந்திரம், பேக்ஸ், குளிர்சாதனம், தீயனணப்பான் ஆகியவற்றிகாக தொடர செலவினமாக 2 கோடியே, 41 லட்சத்து, 53 ஆயிரத்து 300 ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.
       வருவாய் துறையில் அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள் மூலம் பொதுமக்கள் பெரிது பயனடைவார்கள்.  
-இணைய செய்தியாளர் - சந்திரசேகர்

மூலிகை பெட் ரால் ராமர் பிள்ளை



''ஆமா சார், 15 வருஷத்துக்கு முன்னால ஒரு லிட்டர் 13 ரூபாய்னு வித்தேன். இப்போ தொழில்நுட்பம் வளர்ந்துடுச்சு. அதனால ஒரு லிட்டர் அஞ்சு ரூபாய்க்குத் தயாரிக்கலாம். வரி விதிச்சா அதிக பட்சம் ஏழு ரூபாய் வரும். இப்போ ஒரு லிட்டர் 70 ரூபாய். இந்தக் காசுக்கு 14 லிட்டர் மாற்று எரிபொருள் போடலாம். நம்புறதுக்கு கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா, நடைமுறைக்கு வரும்போது எல்லாம் சரியாகிடும். நிச்சயம் என்னை நிரூபிப்பேன். ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்குத் திருப்புமுனையான செய்தியாக இது இருக்கும்!'' ....இத நம்பலாமா ???                                                                                         நன்றி :விகடன்

வெள்ளரி!!!

 வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும். உடலைக் குளிரவைக்கும்.
வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால், தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின், இத்தனையு வெள்ளரியில் உண்டு.

இவற்றைவிட, நம் இத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல், கல்லீரல் இவற்றில் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு இருப்பதால் அப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும். செரிமானம் தீவிரமாகும். பசி அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விசேஷ ஜீரண நீர் சுரக்கிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.

மலத்தைக் கட்டுப்படுத்தும் பித்தத்தைக் குறைக்கும். உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களைப் போக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. வெள்ளரிப் பிஞ்சை உட்கொண்டால் திரிதோஷமும் போகும் என்று பழைய வைத்திய நூல்கள்பேசுகின்றன.
புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது.

நஞ்சை நீக்கும் அற்புக ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியும், மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும்.
நுரையீரல் கோளாறுகள், கபம் & இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடுவது நல்லதல்ல.
                                                               இணையதள செய்தியாளர் :
- சுனிதா ராணி
 


அன்பான உறவுகளே இன்று +2 ரிஸல்ட் வெளியாகிறது ..வெற்றி பெறும் பிள்ளைகளை மேலும் ஊக்கப்படுத்துங்கள் தோல்வி பெறும் பிள்ளைகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள் காயப்படுத்திவிடாதீர்கள் இன்றைய தோல்வி நாளைய இமாலய வெற்றிக்கு அடித்தளம் என்பதை கூறி அரவணையுங்கள் குறிப்பாக பெண்பிள்ளைகள் மிகவும் சோர்ந்துவிடுவார்கள் அன்போடு அரவணைத்து அவர்களின் சோர்வான மனநிலையை மாற்றுவதே அவர்களின் எதிர்காலத்துக்கான அருமருந்து ....         
                                                                                                                    
மாணவர்களின் எதிர்காலம் அக்கரையில்   -சிபிசந்தர்